More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் போலீசார் விசாரணை!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் போலீசார் விசாரணை!
Apr 21
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் போலீசார் விசாரணை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில்



24-4-2017 அன்று காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.



இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.



மேலும் கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.



இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.



இந்த தனிப்படையினர் எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.



இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டியிடம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் வைத்து 5 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். மறுநாள் அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணன் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.



கோவை மாவட்ட அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் அனுபவ் ரவியிடம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு டிரைவர் கனகராஜ் பேசியதாக தெரிகிறது. எனவே அவரிடம் கடந்த 18-ந் தேதி 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.



இதற்கிடையே ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.



இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, சசிகலாவிடம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (வியாழக்கிழமை) மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.



அப்போது சசிகலா, கொடநாடு வழக்கு தொடர்பாக தனக்கு தெரிந்த தகவல்களை கூறுவார் என்று கருதுவதாக போலீசார் தெரிவித்தனர். சசிகலாவிடம் விசாரணை நடத்த ஜ.ஜி. தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னைக்கு புறப்பட்டு வருகின்றனர். எனவே இந்த வழக்கில் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan04

வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்க

Jan26

சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100  நாட்கள் போ

Jun22

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்

May28

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான

Jan25
Feb26

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது

Dec28

 மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல

Sep24

தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின்  இணைப

Jun07

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந

Mar27

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்ற

Feb05

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பா

Feb04

மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு

Sep17

பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்க

Aug17

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்

Jul24

 தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (22:36 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (22:36 pm )
Testing centres