More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அலுவலகங்களில் குறைபாடுகளை களைய உள்தணிக்கை!
அலுவலகங்களில் குறைபாடுகளை களைய  உள்தணிக்கை!
Apr 23
அலுவலகங்களில் குறைபாடுகளை களைய உள்தணிக்கை!

நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாடுகளை களைய உள்தணிக்கை  என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், "நெடுஞ்சாலைத்துறையில் குறைபாடுகளை களைய “உள்தணிக்கை (Internal Audit)" என்ற புதிய நடைமுறை செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.



சமீபத்திய ஒன் இண்டியா (One India) இணையதள சேவையில், கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சில சாலைப்பணிகள் நிறைவு செய்யப்படுவதற்கு முன்னரே ஒப்பந்தத் தொகை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியதாக செய்திகள் வெளிவந்தது. அச்செய்தியினை தொடர்ந்து கண்காணிப்புப் பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, திருப்பூர் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் சேலம் ஆகியோரின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட 2 கோட்டப் பொறியாளர்கள், 2 உதவிக் கோட்டப் பொறியாளர்கள், 2 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 2 கோட்டக் கணக்கர்கள் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஆர்.கோதண்டராமன் விசாரணை அலுவலராக நியமனம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.



இதுபோன்ற நிகழ்வுகள் வேறு எங்கும் நடைபெற்றுள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் உத்தரவிட்டதன்பேரில், “உள்தணிக்கை (Internal Audit)” என்ற புதிய நடைமுறை நெடுஞ்சாலைத்துறையில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகைச் சார்ந்த 9 வட்டங்கள், நபார்டு மற்றும் கிராமச் சாலை அலகைச் சார்ந்த 4 வட்டங்களில் செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளையும், பிற அலகுகளான - தேசிய நெடுஞ்சாலைகள், திட்டங்கள், - பெருநகரம் (மெட்ரோ ), ' நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், ' திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு, - தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம்-II, * சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டம்சார்ந்த கண்காணிப்புப் பொறியாளர்கள் தலைமையிலான குழு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில், உள்தணிக்கை செய்து அறிக்கையினை முதன்மை இயக்குநர் நெடுஞ்சாலைத்துறை சென்னை அவர்களுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep28

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சே

Mar02

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூ

Mar28

வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் சிறப்பு விருந

Apr30

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு

Jul09

கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ

Mar12

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்

Jun08

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

May21

இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக

Mar26

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும்

Feb24

முதல்முறையாக ‘ராகுல் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் அ

May29

சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த

Jul31

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந

Mar21

அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக ந

Oct01

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருக

Feb08

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (18:05 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (18:05 pm )
Testing centres