ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் ராம் சரணின் 15வது படத்தை இயக்குனர் வருகிறார் பிரபல இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.
ராம் சரணுக்கு ஜோடியாக இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, நடிகர் ஜெயராம். சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அமிர்தசரஸில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றிய ரத்னவேலு இணைந்துள்ளாராம். ஷங்கருக்கும், திருவுக்கும் ஏகப்பட்ட மனகசப்பே திரு இப்படத்திலிருந்து வெளியேறிதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

சினிமா பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைகிறார்கள் என்ற
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ
நடிகை சமந்தா ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒரு பிரபலம். அ
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்
அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, தற்ப
ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகையான தமன்
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி
