தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாவுடன் நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். அனுபமா பரமேஸ்வரனை தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டையில் ஒரு கடையை திறந்து வைக்க அழைத்து இருந்தனர்.
அங்கு அவரை காண நிறைய ரசிகர்கள் திரண்டு நின்றார்கள். காரில் வந்து இறங்கிய அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்று கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சி முடிந்து காருக்கு அவர் திரும்பியபோது ரசிகர்கள் சூழ்ந்தனர். ரசிகர்கள் கூட்டத்தில் அனுபமா பரமேஸ்வரன் சிக்கினார். அனுபமாவுடன் ரசிகர்கள் முண்டியடித்து சிலர் கைகுலுக்கி செல்பி எடுத்தனர்.
அவரை காரில் ஏற விடாமல் தடுத்து ரகளை செய்தனர். செல்பி எடுக்க முடியாத சிலர் கோபத்தில் அனுபமா காரின் டயரில் காற்றை பிடுங்கி விட்டனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய அனுபமா தவித்தார். உடனே கடை ஊழியர்களும், போலீசாரும் ரசிகர்களை விரட்டி அனுபமாவை மீட்டு வேறு ஒரு காரில் ஏற்றி ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வர
கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும
நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரு
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனரு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, த
‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருந்த ராஜ
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்ப
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ
‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று ம
