குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக உச்சி மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
இன்று முதல் மே 1-ம் தேதி வரை நடைபெறவுள்ள மூன்று நாள் உச்சி மாநாட்டில், அரசாங்க தொழில் கொள்கை, எம்எஸ்எம்இ, புதிய தொழில் மற்றும் பிற கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடியின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
படிதார் சமூகத்தின் சமூக- பொருளாதார மேம்பாட்டிற்கு உத்வேகத்தை வழங்கும் வகையில் சர்தார்தம் 'மிஷன் 2026-ன்' கீழ் படிதார் வணிக உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உச்சி மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படுகிறது. முதல் இரண்டு உச்சி மாநாடுகள் 2018-ம் ஆண்டு மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடைபெற்றன.
தற்போதைய உச்சி மாநாடு இன்று சூரத்தில் 'ஆத்மநிர்பர் சமூகம் ஆத்மநிர்பர் குஜராத் மற்றும் இந்தியா' என்கிற முக்கிய கருப்பொருளின் கீழ் உச்சிமாநாடு நடைபெறுகிறது.
உச்சி மாநாடு படிதார் சமூகத்திற்குள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய தொழில்முனைவோரை வளர்த்து ஆதரிப்பது மற்றும் படித்த இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவிகளை வழங்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல
போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சி
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவத
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தி
ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்
உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்
தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப
இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக்
ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச
நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை
1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதிய
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்