பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
விசேடமாக கடல் வழியாக இவ்வாறு தப்பி செல்வது இலகுவாக இடம்பெறுவதனால் பல கடல் எல்லைகளில் கடற்படையினர் நீண்ட காலமாக பாதுகாப்பினை தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விமானப்படையும் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக விமானப்படை பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலத்தில் வட மாகாணத்தை சேர்ந்த சுமார் 200 பேர் இவ்வாறு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் செல்ல முயன்ற பலர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு தப்பிச் செல்ல பல்வேறு மீன்பிடி படகுகளை சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த படகுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசேட தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தி
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந
ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி
திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ
ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்
தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளி
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னா
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில
வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத
நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தன
யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட
சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடி
