கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Markham நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Markham massage நிலையத்தில் இலவச பாலியல் சேவைக்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாள படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் கடந்த 8ம் திகதி நிகழ்ந்தது. கைது செய்யப்பட்டவர் காவல்துறையில் பணியாற்றவில்லை என்பதை York பிராந்திய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இனிவரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பொலிஸார் கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டனர்.
எவ்வாறாயினும், இவர் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவத
ஈரான் அதிபா் தோதலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற தலைம
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
பயண தடைக்கு பின்னர் இந்தியாவில் தவித்த ஆஸ்திரேலியர்க
நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க
கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா 2023ம
சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கடைசியி
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதி
நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3
டான்பாஸ் பிராந்தியம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்
நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளத
சீனாவில் உகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடு
உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத
டுபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவிலின் திறப்பு விழா
