ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க போவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து இந்த அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாகவும் அடுத்த தேர்தலை இலக்கு வைத்து இந்த கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்த செயற்பாட்டுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சியின் தலைவர் பதவியை பொறுபேற்குமாறு தற்போதைய அரசாங்கத்தில் உயர் பதவியை வகித்து வரும் சிரேஷ்ட தலைவருக்கு அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பல கட்சிகள் புதிய கட்சியுடன் உடன்படிக்கைகளை செய்து அங்கத்துவத்தை பெற தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கட்சியை ஆரம்பிக்க எடுத்துள்ள முடிவு காரணமாக அந்த கட்சிக்குள் பிளவு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்
சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்தி
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்
இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பத
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்
கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திர
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா
வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்க
