More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கட்டமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் எந்த நாடும் உதவி புரிவதற்கு முன்வராது: இரா.துரைரெத்தினம்
கட்டமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் எந்த நாடும் உதவி புரிவதற்கு முன்வராது: இரா.துரைரெத்தினம்
May 03
கட்டமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் எந்த நாடும் உதவி புரிவதற்கு முன்வராது: இரா.துரைரெத்தினம்

உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கட்டமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் பலவீனமான திட்டங்களும், நிருவாகங்களும் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தால் எந்த நாடும் உதவி புரிவதற்கு முன் வராது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,



ஜனாதிபதியின் வருகைக்குப் பின், நாடாளுமன்ற புதிய மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கத்தின் பின் கோவிட் காரணமாகவும், இங்கு நடைபெற்றுள்ள குண்டு வெடிப்பு, சர்வதேசத்தின் இலங்கை தொடர்பான நம்பிக்கையீனம், நாட்டை ஆளுவதற்கு நிதிப்பற்றாக்குறை, வெளிநாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய கடன்சுமை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையேற்றம், விவசாயத்திற்கான யூரியா, கிருமிநாசினியை இல்லாமல் செய்தமை போன்ற சூழ்நிலையில் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்குகின்ற நிலையில் இலங்கை அரசு செய்வதறியாது திகைப்படைந்து நிற்கின்றது.





இந்த நிலையில் கோவிட் காரணமாக டொலர் தட்டுப்பாடு, நிதிப் பற்றாக்குறை, அரசாங்கத்தின் மோசடி ஆட்சிமுறை, வெளிநாடுகளின் அழுத்தங்கள், அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் போன்றவற்றினால் நாட்டை புதிய அரசு ஆட்சி செய்ய முடியாமலுள்ளது.



இந்நிலையில் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இந்த அரசுக்கு எதிராகவும், ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் மூவின மக்களும் கட்சி பேதமின்றி, இனமத பேதமின்றி வரலாற்றில் இல்லாதவாறு அரசுக்கு எதிராக வெகுஜன ரீதியான போராட்டங்களை முடக்கி விட்டுள்ளனர்.



இந்த நிலையில் பெரும்பான்மை பலத்தை இழந்த அரசு எதிர்க்கட்சிகளின் பலவீனங்களும், வெளிநாடுகளின் தலையீடுகளினாலும் முழுமையாக இந்த ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாமல் ஸ்தம்பித்துள்ளனர். ஒவ்வொரு கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும், வெளிநாட்டு நிறுவனங்களும் மக்களின் நலன்களுக்காகப் பேசி தங்களின் நலன்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முயற்சி எடுத்து வருகின்றது.



இலங்கையின் நிலைமைகளைப் பரிசீலனை செய்து பொருளாதார ஒப்பந்தங்கள், ஏனைய இலங்கை மக்கள் நலன்கள் தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒழுங்கான நல்லாட்சிக்கான,திறமையான ஒரு கட்டமைப்பு அரசியல் ரீதியாகவும், நிருவாக ரீதியாகவும் இருப்பது அவசியமாகும்.





அப்படி ஒரு பலமான கட்டமைப்பு இருந்தால் மட்டுமே உதவி செய்து வருகின்ற, உதவி செய்யப் போகின்ற நாடுகள், நிதி நிறுவனங்கள், அமைப்புக்கள் நம்பிக்கையோடு இருந்தால் மட்டுமே இலங்கைக்கு உதவிகளைச் செய்யும்.



எது நடக்கின்றதோ, இல்லையோ மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி, நிர்வாகமாக இருந்தாலும் சரி உதவி புரிகின்றவர்களில் உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கட்டமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் பலவீனமான திட்டங்களும், நிருவாகங்களும் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்தால் எந்த நாடும் உதவி புரிவதற்கு முன் வராது.



மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டு ஆட்சியாளர்களுக்கெதிராக போராட்டம் நடாத்தி அது வன்முறையாக மாறி வன்முறை வளர்த்து இறுதியில் கலவரம், இனக்கலவரம், இராணுவ ஆட்சி, சதிப்புரட்சி வரையும் கொண்டு செல்லும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr20

கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார

May18

  கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்த

Sep24

இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்

Jan28

திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா

Mar07

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில

Sep21

கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த

Oct07

இலங்கையில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்

Jan23

நேற்று  இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக

Apr04

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அ

Sep16

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒ

Feb02

சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு

Mar26

மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், மு

May29

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா  தொற்றை கட்டுப்படு

Jan24

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்ட எதிர்

Jan29

 அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (17:02 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (17:02 pm )
Testing centres