More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • றம்புக்கண துப்பாக்கிச் சூடு- நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
றம்புக்கண துப்பாக்கிச் சூடு- நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
May 03
றம்புக்கண துப்பாக்கிச் சூடு- நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது சம்பவம் தொடர்பாக சரியாக விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேகாலை நீதவான் வாசனா நவரத்ன, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.



அத்துடன் றம்புக்கண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கேகாலை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் ஏனைய காவல்துறை அதிகாரிகள் மூன்று பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.



எரிபொருள் கிடைக்காதது சம்பந்தமான றம்புக்கணயில் நடைபெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது, காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.



இதன் போது முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உட்பட எனைய காவல்துறையினருக்கு பிணை வழங்கினால், விசாரணைகளுக்கு தடையேற்படக் கூடும் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் எனக் கூறி, சந்தேக நபர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.





அன்றைய தினம் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.



மேலும் நாட்டில் விசாரணைகளை நடத்தும் பலமான நிறுவனமான குற்றவியல் விசாரணை திணைக்களம் தொடர்பான மக்களுக்கு இருக்கும் கடும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதவான் அறிவித்துள்ளார்.



 



எரிபொருளை கோரி, றம்புக்கண கூட்டுறவு எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டத்துடன் சம்பந்தப்படாத 41 வயதான சமிந்த லக்சான் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டார்.



மேலும் 13 பேர் காயமடைந்தனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct20

சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா

Jan19

டெல்லியில் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த தங

Feb11

மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன்

Jan20

கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடும

Jun15

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு

Feb16

 கே.எஃப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் சே

Jun09

  இந்தியாவின் உத்தர்ப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 16 வ

Mar08

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக்

Apr03

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில

Dec28

டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச

Jul13

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்

Apr19

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும்

Aug04
Jul25

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன

Jan27

உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (18:30 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (18:30 pm )
Testing centres