அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவியின் மீது திடீரென மின்விசிறி கழன்று விழுந்தது. இச்சம்பவத்தில் அந்த மாணவி காயமடைந்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அப்பள்ளியின் ஒரு தேர்வு அறையில் திடீரென மின்விசிறி ஒன்று கழன்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரின் மீது விழுந்தது.
இதில் அந்த மாணவியின் கண்ணுக்குக் கீழ் மின்விசிறியின் இறக்கை கீறியுள்ளது. இதையடுத்து அந்த மாணவி உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அந்த அறையில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதிசெய்த பிறகு தொடர்ந்து அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். தேர்வு முடிவடைந்த பிறகு, அந்த மாணவிக்கு மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவி நலமாக உள்ளாதாக அப்பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்..
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ்
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் மெதுவாக வேகம
பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு ம தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்த ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் நிதி நெருக்கடி ஏ டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊ பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப
