வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக, தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும்,
நாளை மறுநாள் நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,கரூர்,நாமக்கல்,திருச்சி,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில்,பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யவுள்ளதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் இன்றைய தினம் 30 முதல் 40 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர
வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்த
டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம்
மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் டாக்டர் தருண், ஏற
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள
விருப்பமில்லாத திருமணத்தால் கணவரை கூலிப்படையை ஏவி கொ
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசி
இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர