இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் 74 வருட அனுபவத்தைக் கொண்டு அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான எநத முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தினார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், போரின் பின்னர் 13 வருடக்காலத்தில் கூட வடக்குகிழக்கு கடல் ரீதியான பொருளாதாரம் அனைத்து அரசாங்கங்களினாலும் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டுள்ளது.
19வது திருத்தம் மீண்டும் கொண்டு வரப்படவேண்டும் என்று கூறப்படுகின்ற நிலையில் அது நடைமுறையில் இருந்தபோதும் பல கோடி ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டதாக கஜேந்திரன் குறிப்பிட்டார்.
இனவாதத்தை இந்த நாடு என்று கைவிடுகிறதோ அன்றே நாட்டுக்கு விடிவுக்கிடைக்கும் என்றும் கஜேந்திரன் தெரிவித்தார்.
எதிர்கட்சியின் சார்பில் உரையாற்றியவர்கள் சர்வதேச நன்கொடையாளர்களின் மாநாட்டை நடத்தும் கோரியபோதும், புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியை பெற்றுக்கொள்வதில் பின்னிற்கிறார்கள் என்று கஜேந்திரன் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை இன்று இலங்கைக்கு நிவாரணத்தை வழங்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , இலங்கையில் ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி தீர்வு ஏற்பட உதவியளிக்கவேண்டும் என்றும் கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப
யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள
அமைச்சர் நாமல் ராஜபக்ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்
கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்த
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர
இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்
முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு
நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ
அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட
தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்
போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க
மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவ
