சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மாவட்ட இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இளைஞர் சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய முன்னேற்பாடு திட்டமான ஆரஸ்சாவ, சுரக்கும திட்டத்தின் ஆரஸ்சாவ திட்டத்தில் இணைந்து கொண்ட மாணவர்களுக்கான ஓய்வூதியத் தொகையின் பெறுமதியின் அடிப்படையில் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இலக்கினை 100 வீதம் பூர்த்தி செய்தமைக்காக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களுக்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதே போன்று பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்ட இலக்குகளை தேசிய ரீதியில் அடைவு மட்டத்தை அடைந்து கொண்ட பிரதேச செயலகமாக நானாட்டான் பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டதுடன் அப் பிரதேச செயலகத்திற்கான தேசிய விருதும் (2021) வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதேபோன்று 2019ஆம் ஆண்டு தேசிய ரீதியில் அடைவு மட்டத்தை அடைந்த பிரதேச செயலகமாக மன்னார் நகர பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டதுடன் அதற்கான தேசிய விருதும் முன்னாள் பிரதேச செயலாளருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்ப
இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி
மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, ந
தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
மியன்மார், ஈரான் நாடுகளை போல இன - மத அடிப்படைவாதிகளின்
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்
