கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் Clement Voule கவலை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை பொதுக் கூட்டங்களுக்குத் தடையாக முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் உரிமைகளை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் இலங்கை நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், கொழும்பு – உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் தலைமையகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்புப் படைகள் மற்றும் முப்படைத் தளபதிகளின் தலைமையகம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல இடங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள வளாகங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை
நாளை முதல் கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் மின் வெட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
இலங்கையில் மயில்கள் உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை ந
சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமா
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத
