எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்துடனேயே கழிப்பதாக வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள் இலங்கை அரசிடம் ஏமாந்த நாங்கள் சர்வதேசத்திடம் நீதியை கேட்டு தொடர்ச்சியாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். சர்வதசேமும் எங்களை ஏமாற்றாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 51 வது கூட்டத்தொடரிலாவது எமக்கான தீர்வினை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிநிற்கின்றோம்.
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொரு நாளையும் நாம் துக்கத்துடனேயே கழிக்கின்றோம். நாம் மகிழ்ச்சியாக இல்லை. எனவே எமது உறவுகள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்ததுஎன்பதற்கான சரியான பதிலை சர்வதேசம் எமக்கு வழங்கவேண்டும்.இல்லாவிடில் எமது உறவுகள் வரும்வரைக்கும் நாம் போராடிக்கொண்டே இருப்போம். என்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிரான பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடும
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச
அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் ப
இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக
கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இரு
யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம் நேற்று மாலை 5.27 மணி முத
பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அ
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏ
தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக
ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு
