More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்!...
நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்!...
Oct 02
நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்!...

அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக(PCoI), 504 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.



இதில் 2020 ஆம் ஆண்டில் மிகப் பெரிய தொகையான 120 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.



பொதுவாக இந்த குழுக்களின் கண்டறிவுகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பயனுள்ள முடிவுகளை தந்ததா என்பதை அளவிட முடியவில்லை.



2015, மார்ச் 3 (03.03.2015) மற்றும் இந்த ஆண்டு ஜூன் 30ஆம் (30.06.2022) திகதிக்கு இடையில், சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கான பணம் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் ஐந்து சிறப்பு ஆணைக்குழுக்களை நியமித்தார். இதற்காக அவரது பதவிக்காலத்தில் 337 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.



இவை அரசியல் பாதிப்புகளை விசாரணை செய்தல், எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்ட தவறுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்தல், முந்தைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழியை மதிப்பிடுவதற்கான விசாரணைகளை மேற்கொள்ளல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை விசாரணை செய்தல் மற்றும் இலங்கை சுங்கத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களாகும்.



2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கு இடையில், நல்லாட்சி அரசாங்கத்தின் முதல் மூன்று வருடங்களில், ஐந்து ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவற்றுக்கு 254 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.



பாரிய மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் சலுகைகள் (PRECIFAC) தொடர்பான விசாரணைகள், திறைசேரி பத்திரங்களை வழங்குதல் தொடர்பான விசாரணை, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை, அவரது சொந்த அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் விசாரணை, மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை என்பவற்றுக்காக இந்த ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்

Mar15

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்க

Nov23

யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை

Mar16

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப

Apr06

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி

Mar15

பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி  பால

Feb11

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்

Sep21

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத

May04

கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத

Feb11

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா

Jul06

சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க

Sep22

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத

Mar01

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ம

Jan27

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன

May01

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (00:20 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (00:20 am )
Testing centres