More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் -குற்றச்சாட்டு!
ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் -குற்றச்சாட்டு!
Oct 04
ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் -குற்றச்சாட்டு!

பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நாட்டில் நடந்த போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.



அமைதியின்மை குறித்த தனது முதல் பொதுக் கருத்துக்களில் அயதுல்லா அலி கமேனி ஈரானின் பரம எதிரிகள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளால் கலவரங்கள் தூண்டப்பட்டதாக கூறினார்.



ஒரு தசாப்த காலமாக தனது ஆட்சிக்கு எதிர்ப்புகள் மிகப்பெரிய சவாலாக உள்ளன மேலும் பாதுகாப்புப் படைகள் மேலும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



அமைதியான போராட்டக்காரர்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறை தீவிரமடைகிறது என்ற அறிக்கைகள் குறித்து தான் கடுமையான கவலை அடைவதாக ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி வட மேற்கிலுள்ள சாகேஸ் நகரை சேர்ந்த 22 வயதான குர்து இன பெண்ணான மாசா அமினி தெஹ்ரானில் அவருடைய சகோதரரோடு இருந்தபோது தலைமுடியை ஹிஜாப்பால் மறைப்பது மற்றும் தளர்வான ஆடையால் முழு உடலையும் மறைக்க உத்தரவிடும் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமுலாக்கும் பொலிஸ்துறையால் கைதுசெய்யப்பட்டார்.



பொலிஸ்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அமினியின் தலையில் பொலிஸ்துறையினர் பிரம்பால் அடித்ததாகவும் பொலிஸ்துறையினரின் வாகனத்தில் அவரது தலையைக் மோதச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் தற்காலிக உயர் ஆணையர் நடா அல்-நஷிப் தெரிவித்தார்.



தாக்குதலுக்கு பிறகு 3 நாட்கள் கோமா நிலையில் துன்பப்பட்டு, மாசா அமினி, மருத்துவமனையில் உயிரிழந்தார்.



இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் பொலிஸ்துறையினர், அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அமினி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.



பொலிஸ்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். அங்கு 150க்கும் அதிகமான இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களின் போது இதுவரை 92க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன

Oct28

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்

May25

அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25

May14

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய

Jun16

சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறு

Jul09

தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா

May16

பயண தடைக்கு பின்னர் இந்தியாவில் தவித்த ஆஸ்திரேலியர்க

Jun29

வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை கு

May29

ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்ட

Mar05

ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தா

Mar29

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமு

Feb21

பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான

Sep13
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (16:49 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (16:49 pm )
Testing centres