மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாளரை இடமாற்ற கோரி போக்கு வரத்துசபையின் நடத்துனர்கள் சாரதிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
4 தொழிற்சங்கங்களும் இணைந்து முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பினால் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளிமாவட்ட மற்றும் குறுந்தூர பஸ் போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ளது.
போக்குவரத்து சபையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட முன்னாள் முகாமையாளருடன் பிரதி முகாமையாளர் பல இலஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டுவருவதாகவும் 10 நடத்துனர்களை வேலையில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளதாகவும் சாரதிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அத்துடன் இதுதொடர்பான ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன் தமக்கு நீதி கிடைக்கும்வரை இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் என தொழிற்சங்க தலைவர் துரைராஜா தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளை
விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிம
இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு கு
துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமை
மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்
இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட
இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படு
ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமத
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து
