More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கடலில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை துரிதம்!
கடலில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை துரிதம்!
Oct 06
கடலில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை துரிதம்!

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன் அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.



கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26 ம் திகதி அன்று மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் மேற்குறித்த விடயத்தை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



மேற்குறித்த மீனவர்கள் காணாமல் சென்ற விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு மீனவ சங்கத்தினர் கொண்டு வந்திருந்த போதிலும் தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமல் போன படகு உரிமையாளரினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.



எனவே கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாவது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு ஏதாவது கொடுப்பனவையோ அல்லது நஷ்டஈட்டையோ பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் எவரும் இதுவரை முன்வரவில்லை. எனினும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.



குறித்த விடயத்தை மனிதாபிமான நடவடிக்கையாக ஏற்றுக்கொண்டு குறித்த மீனவ குடும்பங்களிற்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டு கnhள் முன்வைக்கப்பட்டுள்ளது.



அம்பாறை மாவட்டத்தின் கல்முனை துறையில் இருந்து ஆழ்கடல் இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் 10 நாட்களாகியும் இதுவரை கரைதிரும்பவில்லை என்பதுடன் கடந்த திங்கட்கிழமை (26) குறித்த படகில் சென்ற நிலையில் எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவித்த நிலையில் உள்ளனர்.



இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ் கடற்படை உள்ளிட்ட தரப்பினருக்கு மீனவ சங்கம் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் தனியான தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒர

Feb11

சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த

May03

காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்கு

Feb07

அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் க

Feb02

இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த

Sep30

கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு

Oct18

ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருக

Sep28

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்

Oct04

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மை

Jul11

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க

May01

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந

Apr07

திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்

Apr11

இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந

May21

கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன

Sep21

ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (08:40 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (08:40 am )
Testing centres