More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தேசிய பேரவையின் தலைவராக சம்பிக்க ரணவக்க நியமனம்
தேசிய பேரவையின் தலைவராக சம்பிக்க ரணவக்க நியமனம்
Oct 08
தேசிய பேரவையின் தலைவராக சம்பிக்க ரணவக்க நியமனம்

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.



மேற்படி உபகுழுவின் முதலாவது கூட்டம்  நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.



தலைவர் பதவிக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவினால் முன்மொழியப்பட்டது. அதனை நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.



தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல், பால் உற்பத்தியை அதிகரித்தல், விவசாயத்தை மறுசீரமைத்தல், உர உற்பத்தி, சுற்றுலாத் தொழில் போன்ற நாட்டின் எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழுவின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.



பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களுடன் கலந்துரையாடி ஒவ்வொரு துறை தொடர்பான பொருளாதார அபிவிருத்தி முன்மொழிவுகளை உள்ளடக்கிய அறிக்கையை 20ஆம் திகதி தேசிய பேரவைக்கு சமர்ப்பிக்கவும் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.



இதன்படி, அந்நியச் செலாவணி விவகாரங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிபுணர்களையும் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளையும் எதிர்வரும் 13ஆம் திகதி குழுவின் முன் அழைத்து கருத்துக்களைப் பெறுவதற்கு உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.



மேலும் உணவு, சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரும் 14ம் திகதி அழைத்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கும் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.



பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய போரவை உபகுழுவின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 19ஆம் திகதி நடத்துவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.



அமைச்சர் நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயக்கொடி மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, எம்.ராமேஸ்வரம், மனோ கணேசன், ஏ.எல்.எம்.அதாஉல்லா, ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



தேசிய பேரவையின் மற்றொரு உப குழுவான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Sep13

தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆகஸ்ட் மாத

Apr04

  நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்க

Feb23

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய

Oct22

சதொசயில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போதுஇ சிவப்பு

Jun08

ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி

Feb27

மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்

Apr03

நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட

Mar03

உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்

Feb05

நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு

May03

நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம

Oct03

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட

Apr03

இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு

Oct15

அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ

Jan28

தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (16:16 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (16:16 pm )
Testing centres