இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயாகனாக அறிமுகமானவர் ஆர்யா. அதன்பின்னர் உள்ளம் கேட்குமே, பட்டியல்,
ஓரம் போ, நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம், டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகிக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.
இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் 34-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை குட்டிபுலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
நடிகை ஷாமிலி தனது சகோதரி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோ
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி
பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நட
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவ
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
பாக்கியலட்சுமி சீரியல் விஜய்யில் ஹிட் லிஸ்டில் இருக்
நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாத
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக
