ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு கிடைத்தது என்பது இரகசியமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் கட்சிப் பிரிவினைகள் இன்றி ஜனரஞ்சகமாக செயற்பட எதிர்பார்க்கும் பின்னணியில்இ தேசிய பேரவை மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர் 'நாடாளுமன்றத்திற்குள் கட்சி அமைப்பிலிருந்து குழுக்கள் உருவாகியுள்ளன.
ஆளுங்கட்சியின் ஆதரவுடன் நான் ஜனாதிபதியானேன் என்பது இரகசியமல்ல. ஒரு சிறுபான்மையினர் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் சென்றனர். எனக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைத்தது. மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர்.
எங்களுடைய குறுகிய கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நான் செய்துகாட்ட விரும்புகிறேன். அதன்படி செயற்படுங்கள்.
தற்போதுஇ கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்றத்தில் தேசிய பேரவை நிறுவப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஏனைய சபைகளும் நிறுவப்பட்டுள்ளன.
ஆனால் இன்னும் இவற்றை நிரப்ப முடியவில்லை. சிலர் தேசிய பேரவையில் இணைகின்றனர். மற்றவர்கள் வருவதில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அ
யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அ
போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் ச
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அத
மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி
கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரி
பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
