More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வன இலாகாக்குரிய காணிகளிலும் விவசாயம் செய்ய நடவடிக்கை – மஸ்தான்!
வன இலாகாக்குரிய காணிகளிலும் விவசாயம் செய்ய நடவடிக்கை – மஸ்தான்!
Oct 13
வன இலாகாக்குரிய காணிகளிலும் விவசாயம் செய்ய நடவடிக்கை – மஸ்தான்!

வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச்சுடன் கதைத்து விவசாயம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.



உள்ளூர் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் உழுந்துஇ பயறு செய்கைக்கான விதை தானியங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.



மேலும் கருத்து தெரிவிக்கையில் பொருளாதார பாதிப்பால் எமது பகுதி மக்கள் பாதிப்படைந்திருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் விவசாய மக்களை ஊக்கப்படுத்தும் முகமாக 12 மாவட்ட மக்களுக்கும் உள்ளூர் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் பொருட்டு விதை தானியங்கள் வழங்கப்படுகின்றது.



அதில் வன்னி மாவட்ட அமைச்சர் என்ற வகையில் அதிகமாக 9 மில்லியன் என்ற அடிப்படையில் நிதி வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற வருடங்களில் அனைவருக்கும் வழங்கக்கூடிய வகையில் நிதி உதவிகளை கேட்டிருக்கின்றோம். கிடைக்கும் பட்சத்தில் அதனை வழங்குவதாக இருக்கின்றோம்.



சிறிய உதவியாக இருப்பினும் குறித்த உதவிகளை பெற்றவர்கள் அதனை உரிய முறையில் பயன்படுத்தி நாட்டில் எதிர்பார்க்கப்படுகின்ற உணவு பற்றாக்குறையின் தாக்கத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் உங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.



எங்களது மாவட்டங்களில் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றது. குறிப்பாக அண்மையில் வன இலாகா அமைச்சருடன் கதைத்திருந்தோம். எமது பகுதிகளில் உள்ள விவசாய பயிர்ச்செய்கை, தோட்ட பயிர்ச்செய்கைகளில் வன இலாகாவின் பிரச்சினை பாரியளவில் இருக்கின்றது.



அதில் எடுக்கப்பட்ட தீர்மானம் காணிகளில் பிரச்சினை இருக்கலாம் ஆனால் விவசாய பயிர்ச்செய்கை, தோட்டம் செய்யக்கூடிய காணியாக இருந்தால் அதனை அவர்கள் விவசாயம் மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். அதில் வன இலாகாவினர் இடையூறு விளைவிக்க மாட்டார்கள். அந்த அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.



அத்தோடு அமைச்சில் இருந்து ஒரு குழு அனுப்புவதற்கு இருக்கின்றார்கள். எந்த காணியாக இருந்தாலும் அதனை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அதனை விவசாயம் செய்யக்கூடிய ஏற்பாடுகளை அமைச்சோடு கதைத்து ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.



இலங்கையை பொறுத்தவரை காடுகள் அதிகமாக இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரிவது வடமாகாணம் தான். அதிகாரிகளிடம் இருந்து விபரத்தை எடுக்காது சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது தான் பிரச்சினை .



2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமல் வழங்கப்பட்ட சுற்றுநிருபங்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

நுவரெலியாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Mar08

 பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்

May21

இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மண

Mar15

பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி  பால

Feb04

தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என

Oct04

அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள

Jan25

கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி  தீவக மக்

Mar14

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப

Feb15

அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்

Sep22

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்பு

Jul26

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் வைரஸ் த

May15

இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள

Sep15

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண

Jan25

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு

Feb07

இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 17 (23:58 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 17 (23:58 pm )
Testing centres