காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்துள்ள சொல்ஹெய்மிடம் ஆங்கில ஊடகமொன்று மின்னஞ்சலில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் மண்சரிவு மற்றும் தீவிர வானிலை அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் காலநிலை மாற்றத்தை கையாள்வது பசுமையான வேலைகளை உருவாக்குவதற்கும் அனைத்து இலங்கையர்களையும் ஒரு ஒழுக்கமான நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கும் 'ஒரு மகத்தான வாய்ப்பு' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு பசுமையான பாதையை கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் அவரது சிறந்த குழுவினருடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மிகவும் வளமான அறிவுசார் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றும் மற்ற இந்தியப் பெருங்கடல் நாடுகள் மற்றும் உலகின் பிற நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுகிறது என்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தி
கதிர்காமம் - வெடிஹிதி கந்த வீதியில் இன்று (ஏப்ரல் 02) பிற
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு
வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீ
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வ
போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்
நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ
இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ
முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை வ
மன்னார் க
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா
