காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ராணுவ நாய் ஜூம் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்து உள்ளது.
ஸ்ரீநகர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்பவா பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற நாய் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
ஜூம் என்ற பெயர் கொண்ட அந்த நாய் மிகவும் ஆக்ரோஷம் வாய்ந்தது. பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை மட்டுப்படுத்த தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூம் பயங்கரவாதிகள் இருந்த வீட்டிற்குள் நைசாக நுழைந்தது. இதனை கண்ட பயங்கரவாதிகள் அதன் மீது இரண்டு துப்பாக்கி குண்டுகளை துளைத்தனர். எனினும் பயங்கரவாதிகளை கடுமையாக தாக்கி அவர்களை நிலைகுலைய செய்தது.
அந்த இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். படுகாயங்களுடன் ஜூம் நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டது. எனினும் இன்று மதியம் 12 மணியளவில் அது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. காலை 11.45 மணிவரை நன்றாக இருந்தபடி காணப்பட்ட ஜூம் திடீரென மூச்சுவிட சிரமப்பட்டது. பின்னர் உயிரிழந்து விட்டது என ராணுவம் தெரிவித்து உள்ளது.
மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலு
ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ
மதுரை ரிசர்வ் லைன்குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸ
இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர
கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ
அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாத
ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வா
நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி
