காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ராணுவ நாய் ஜூம் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்து உள்ளது.
ஸ்ரீநகர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்பவா பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற நாய் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
ஜூம் என்ற பெயர் கொண்ட அந்த நாய் மிகவும் ஆக்ரோஷம் வாய்ந்தது. பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை மட்டுப்படுத்த தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூம் பயங்கரவாதிகள் இருந்த வீட்டிற்குள் நைசாக நுழைந்தது. இதனை கண்ட பயங்கரவாதிகள் அதன் மீது இரண்டு துப்பாக்கி குண்டுகளை துளைத்தனர். எனினும் பயங்கரவாதிகளை கடுமையாக தாக்கி அவர்களை நிலைகுலைய செய்தது.
அந்த இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். படுகாயங்களுடன் ஜூம் நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டது. எனினும் இன்று மதியம் 12 மணியளவில் அது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. காலை 11.45 மணிவரை நன்றாக இருந்தபடி காணப்பட்ட ஜூம் திடீரென மூச்சுவிட சிரமப்பட்டது. பின்னர் உயிரிழந்து விட்டது என ராணுவம் தெரிவித்து உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்ட
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்
இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்த
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக -அதிமு
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதம
கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாட
