மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத கசிப்பு விற்பனை நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது இந்த முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டது.
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு, முள்ளாமுனை, பத்தரைக்கட்டை, கன்னங்குடா மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளிலேயே இந்த விசேட முற்றுமை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சனின் அறிவுறுத்தலின் கீழ் மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தலைமையிலான குழுவினர் இந்த முற்றுகையினை முன்னெடுத்தனர்.
இப்பகுதிகளில் உள்ள ஆறுகளை அண்டியுள்ள காட்டுப்பகுதியிலேயே சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தெரிவித்தார்.
இதன்போது ஆறு பேர் கைதுசெய்யப்பட்டதுடன் சுமார் 130 லீற்றருக்கும் அதிகமான கசிப்பு மீட்கப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் சொந்தப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் இம்மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையில் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் மற்றும் பியர் விற்பனை செய்த 25 வழக்குகள் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தெரிவித்தார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை ஐந
இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெ
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய்
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங
நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே நா
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
