அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணம் ஒருபோதும் கைகூடாது என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று ஹட்டனில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் தற்போதைய ஆட்சியாளர்களால் இந்நாட்டை ஆள முடியவில்லை. அதனால்தான் மக்கள்மீது வரிச்சுமை திணிக்கப்படுகின்றதோடு ஒரிரு நாட்களுக்கு முன்னர்கூட புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டது என தெரிவித்த அவர் இது ஆரம்பம் மட்டும்தான் அடுத்து வரும் நாட்களில் புதிய புதிய வரிகள் வரலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை மக்கள் எழுச்சியை அடக்குமுறை முறை ஊடாக கட்டுப்படுத்தி ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்திவிடலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருதுகின்றார். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்காது என்பதோடு ஜனநாயக வழியில் நாம் பதிலலொன்றை எதிர்பார்க்கின்றோம். அதற்கான சிறந்த வழி தேர்தலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின
இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் த
மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்ய
கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறு
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த
நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட
நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி
நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்க
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள
