பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தாம் தயார் என்றும் அதற்காகவே தொகுதி மட்டத்தில் கூட்டங்களும் இடம்பெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாவலப்பிட்டிய தொகுதி கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 'போராட்டம் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை, போராட்டக்காரர்கள் தொடர்பில்தான் விமர்சனம் உள்ளது.
சிலர் உண்மையாகவே 'சிஸ்டம் சேன்ஞ்'க்காக போராடினர். சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு போராட்டத்தையே தமதாக்கிக்கொண்டனர்.
இதனால் என்ன நடந்தது என்பது குறித்து உண்மையான போராட்டக்காரர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
அன்று எம்மை கள்ளன் என்றனர். போலிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சட்டப்பூர்வமாக அவற்றில் இருந்து நாம் விடுதலை பெற்றோம்.
ஆனால் இன்றும் அரசியல் இருப்புக்காக சேறுபூசும் பிரச்சாரத்தை அவர்கள் கைவிடவில்லை. 'கள்ளன்', 'கள்ளன்' என கோஷம் எழுப்புகின்றனர். இவ்வாறு கூக்குரல் எழுப்புவதைவிட சட்ட நடவடிக்கை எடுப்பதே மேலானது.
ராஜபக்சவிடம் கறுப்பு பணம் உள்ளது என கூறியவர்கள் கொழும்பில் உள்ள அக்காவுக்கு பணம் கொடுத்துள்ளனர். அவரின் பட்டியலில் எம்மை விமர்சித்தவர்கள் உள்ளனர். சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம். கொள்கை அடிப்படையிலான அரசியல் வாதிகளுக்கு ஆதரவு வழங்குங்கள்' என்றார்.
இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரி
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் 08 லீட்டர் கசிப்பு &nbs
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்ட
அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட
முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மற
நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்ட
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாண
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு
போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் ச
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் வி
