கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சித்தூர் ஆகிய ஊர்களில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளில் கடந்த 2016 ஆண்டிலிருந்து இன்று வரை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 35 லட்சம் டன் கரும்புகளை உற்பத்தி செய்து வழங்கியுள்ளனர்.
ஆனால் சர்க்கரை ஆலை நிர்வாகம் இதுவரை அதற்கான தொகையினை திருப்பி வழங்காமல் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
அந்த அடிப்படையில் 400 கோடி ரூபாய் நிலுவை பாக்கி விவசாயிகளுக்கு திருப்பி தர வேண்டிய நிலையில் வெறும் 80 கோடி மட்டுமே திருப்பி தருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே சர்க்கரை ஆலை நிர்வாகம் முழுத் தொகையையும் திருப்பித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கடலூர் தனியார் சர்க்கரை ஆலை முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.
இதற்காக அவர்கள் திருச்சியில் இருந்து புறப்பட தயாராகினர். இது பற்றி தகவல் அறிந்த மாநகர பொலிஸார் உஷாராகினர்.
பின்னர் அதிகாலை 4 மணி அளவில் உதவி பொலிஸ் கமிஷனர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் அய்யாக்கண்ணு மேகராஜன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகி உள்ளது. கடலூர் அரச
மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இ
திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அ
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வா
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு கல்வி ஆண்
60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா
கேரள சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடக்க
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந
தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள
பாராலிம்பிக் உயரம் தாண்டுத
வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
