குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை சலுகை காலம் வழங்காவிடின் எதிர்வரும் 25 ஆம் திகதியின் பின்னர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குத்தகை நிறுவனங்களுடன் கலந்துரையாடல் ஒன்று ஏற்படுத்தி தர வேண்டும்.
குத்தகை நிறுவனங்கள் தொடர்ந்தும் பேருந்துகளை பொறுப்பேற்க இடமளிக்க முடியாது.
தங்களது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்.
இல்லையெனில் பேருந்து போக்குவரத்தில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும்.
இந்த போராட்டத்தில் அனைத்து மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சங்கம், அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம், ஐக்கிய தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்பன ஈடுபடும் என அஞ்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின
வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்
பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அ
களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி
அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ
அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதி
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோ
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உ
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சே
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர
யாழ்ப்பாணம் நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள
