நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவர்களை விடுதலை செய்கின்றமைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கும் நாடாளுமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நன்றி தெரிவித்தார்.
அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 8 பேரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறினார்.
'இவர்களின் விடுதலை தொடர்பாகச் சிறைச்சாலை திணைக்களத்தினரிடம் நான் தொடர்பு கொண்டபோது குறித்த 8 பேரை விடுவிப்பதற்கான கடிதம் கிடைத்திருக்கின்றது எனவும், 8 பேரும் தீபாவளி தினத்தன்று விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் அவர்கள் அறிவித்தனர்' என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.
அத்துடன் விடுவிக்கப்படுவோரின் பெயர்களையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டுள்ளார். அவர்களின் பெயர்கள் வருமாறு,
01) வரதராஜன்
02) ரகுபதி சர்மா
03) இலங்கேஷ்வரன்
04) நவதீபன்
05) ராகுலன்
06) காந்தன்
07) சுதா
08) ஜெபநேசன். ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்கு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி வ
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்ப
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் க
12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் வில
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க
நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி
கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்க
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மு
