நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவர்களை விடுதலை செய்கின்றமைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கும் நாடாளுமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நன்றி தெரிவித்தார்.
அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 8 பேரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறினார்.
'இவர்களின் விடுதலை தொடர்பாகச் சிறைச்சாலை திணைக்களத்தினரிடம் நான் தொடர்பு கொண்டபோது குறித்த 8 பேரை விடுவிப்பதற்கான கடிதம் கிடைத்திருக்கின்றது எனவும், 8 பேரும் தீபாவளி தினத்தன்று விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் அவர்கள் அறிவித்தனர்' என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.
அத்துடன் விடுவிக்கப்படுவோரின் பெயர்களையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டுள்ளார். அவர்களின் பெயர்கள் வருமாறு,
01) வரதராஜன்
02) ரகுபதி சர்மா
03) இலங்கேஷ்வரன்
04) நவதீபன்
05) ராகுலன்
06) காந்தன்
07) சுதா
08) ஜெபநேசன். ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் வி
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சு வெற்றிகரமாக ந
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள
முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்
கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ள
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதி
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
