இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிணைப்பகுதியில் நேற்று சந்தேகத்திற்கிடமான படகை இடைமறிக்க முயன்ற போது இந்திய கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர் தமிழக கடற்றொழிலாளர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தமிழக அரசாங்கம், இந்திய பிரதமருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
காயமடைந்தவர் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த வீரவேல் என தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது.
இந்தநிலையில் வீரவேலுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் படையினரால் இந்திய கடற்றொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகின்ற நிலையில் இந்திய படையினரின் இந்த செயல் இந்திய கடற்றொழிலாளர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று
இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடி
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ
முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா
சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண
மதுரை ரிசர்வ் லைன்குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸ
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் டாக்டர் தருண், ஏற
குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந