தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் போல் பொங்கலுக்கு மேலுமொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், 'நானும், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும் கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் ஜனாதிபதியுடன் உரையாடினோம்.
பொலிஸ் பதிவு பற்றி மீண்டும் ஒருமுறை ஐஜிக்கு பணிப்பதாக ஐனாதிபதி கூறினார். தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்பட்டதை போல் பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி கூறினார்.
அருகிலிருந்த பிரதமர் மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க, யோகராஜன் ஆகியோரும் சாதகமான கருத்துக்களை பகிர்ந்தனர்.
மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்ட பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.
பெருந்தோட்ட பகுதிகளிலேயே 51 வீத உணவின்மை பிரச்சினை காணப்படுகிறது என கூறினேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய, செயலணி ஒன்றை அமைக்க கோரினேன். ஜனாதிபதி கொள்கைரீதியாக உடன்பட்டார்' என மேலும் தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ வி
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ
யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம் நேற்று மாலை 5.27 மணி முத
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தன
மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு
அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் க
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்
