இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜேவிபி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுக்கு இடையில் உச்ச போட்டி நிலவுவது அறியப்பட்டுள்ளது.
முறையே 32 மற்றும் 31வீத வாய்ப்புக்களை இந்த இரண்டு கட்சிகளும் பெறும் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக்கட்சி 9 வீத வாக்குகளையும், பொதுஜன பெரமுன 8 வீத வாக்குகளையும் பெற்றுக்கொள்ளும்.
அதேநேரம் இலங்கை தமிழரசுக்கட்சி 5 வீதத்தையும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1வீதத்தையும் பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.
ஏனைய கட்சிகள் 14வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்குகள் 3வீதத்தாலும், ஜேவிபியின் வாக்குகள் ஒரு வீதத்தாலும், அதிகரித்துள்ளன.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாக்குகள் 11 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியும், இலங்கை தமிழரசுக்கட்சியும் வடக்குகிழக்கில் முன்னிலைப் பெறும்.
எனினும் மேற்கு, தெற்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஜேவிபி முன்னிலை பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்
ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடும
யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமி
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரி
காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதிய
60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னா
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கர
