இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜேவிபி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுக்கு இடையில் உச்ச போட்டி நிலவுவது அறியப்பட்டுள்ளது.
முறையே 32 மற்றும் 31வீத வாய்ப்புக்களை இந்த இரண்டு கட்சிகளும் பெறும் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக்கட்சி 9 வீத வாக்குகளையும், பொதுஜன பெரமுன 8 வீத வாக்குகளையும் பெற்றுக்கொள்ளும்.
அதேநேரம் இலங்கை தமிழரசுக்கட்சி 5 வீதத்தையும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1வீதத்தையும் பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.
ஏனைய கட்சிகள் 14வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்குகள் 3வீதத்தாலும், ஜேவிபியின் வாக்குகள் ஒரு வீதத்தாலும், அதிகரித்துள்ளன.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாக்குகள் 11 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியும், இலங்கை தமிழரசுக்கட்சியும் வடக்குகிழக்கில் முன்னிலைப் பெறும்.
எனினும் மேற்கு, தெற்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஜேவிபி முன்னிலை பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கி
இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இ
திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த
நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கி
வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்க
இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்க
