வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், குறித்த நபரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இன்று காலை முதல் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அது முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடரி மற்றும் கத்தியை கொண்டு கணவன் மனைவி மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதனைதடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த பெரிய உலுக்குளம் பகுதியை சேர்ந்த 60 வயதான டி.பி. அமராவதி, என்ற பெண் உயிரிழந்த நிலையில், அவரது மகளான 37 வயதான துலிகா ரத்தினசிறி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொ
இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும
தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) ப
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டு
கதிர்காமம் - தம்பே வீதியில்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாத கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் ( சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத் யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட் இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
