சில நாட்களுக்கு முன்பு ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப்பட்ட வடகிழக்கு நகரமான இசியத்தில் 440 உடல்கள் அடங்கிய வெகுஜன புதைகுழியை உக்ரைனிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட சிலரின் உடல்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வார இறுதியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் இசியம் நகரத்தை விட்டு பின்வாங்கினர். நகரத்தை ஆக்கிரமித்து கார்கிவ் பிராந்தியத்தில் ஒரு தளவாட மையமாக பயன்படுத்திய பின்னர் அங்கிருந்து வெளியேறிய போது அவர்கள் ஏராளமான வெடிமருந்துகளையும் உபகரணங்களையும் விட்டுச் சென்றனர்.
இந்த நிலையில்இ இசியத்தில் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் புலனாய்வாளர்கள் அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்கள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்தனர். இதன்போதே இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
ரஷ்யா எல்லா இடங்களிலும் படுகொலைகளை விட்டுச் செல்கின்றது அதற்கு ரஷ்யா பொறுப்பேற்றே ஆக வேண்டும் என கூறிய உக்ரைன் ஜனாதிபதி கிய்வின் புறநகரில் உள்ள புச்சாவில் நடந்த படுகொலைகளை நினைவுக்கூர்ந்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் 'ஐசியத்திற்கு வெளியே ஒரு காட்டில் மரங்களுக்கு மத்தியில் எளிய மர சிலுவைகளுடன் கூடிய நூற்றுக்கணக்கான கல்லறைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை எண்களால் மட்டுமே குறிக்கப்பட்டன. ஒரு பெரிய கல்லறையில் 17 உக்ரைனிய வீரர்களின் உடல்கள் இருந்ததாகக் குறிக்கும் அடையாளமாக இருந்தது' என தெரிவிக்கப்பட்டுள்ளது
அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய
தற்போது வடகொரியாவில் கோவிட் தொற்று அதிவேகமாக பரவி வரு
உலக அளவில்
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அர்வாடா நகரில் உள்ள ஒரு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒர பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா
