கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி இலங்கையில் நடைபெறும் 23வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியாகும்.
இந்த புத்தகக் கண்காட்சி இன்று முதல் செப்டம்பர் 25ஆம் திகதி வரை காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை நடைபெறுகிறது.
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று காலை கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாததால் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் 400 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச புத்தகக் கடைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பொது போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக புத்தகக் கண்காட்சி இரவு 07.00 மணிக்கு முடிவடையும் அதே நேரத்தில் சுகாதார அமைச்சகம் வழங்கிய கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு பம்பலப்பிட்டிஇ கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்தும் விசேட பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏ
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்த
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல
பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற
ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படு
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றி
கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்
மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனை
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான க
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற
