திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வித்தியாசமான முறையிலான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோஷத்தை வலியுறுத்தி வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவின் 50 வது நாளை குறிக்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் கையில் பாதாதைகள்இ பலூன்கள் மற்றும் பட்டங்களை ஏந்தியவாறு பேரணியாக சென்று குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
வடகிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலைக்கு பின்னரான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்இ காணிப் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு கிடைக்க பெற வேண்டும்இ கருத்து சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்இ ஒன்று கூடுவதற்கான அனுமதி மறுக்கப்படக்கூடாதுஇ பயங்கரவாத தடைச் சட்ட திட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்இ மத சுதந்திரம் சிறுபான்மையினருக்கு கேள்விக்குறியாக காணப்படுகிறதுஇ எனும் கோரிக்கைள் பொறிக்கப்பட்ட பலூன்கள் மற்றும் பட்டங்கள் பறக்க விடப்பட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
க.லவகுசராசா வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்
உலகநாயகன் கமல
இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு
முட்டைக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையில் திருத
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்
இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை ச
நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒ
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நில
அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
