ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 90 பேர் காயமடைந்துள்ளனர்.
நன்மடோல் புயல்' என்ற மிகப்பெரிய புயல் தென்கோடியில் உள்ள கியூஷு தீவில் கரையைக் கடந்ததில் ஒன்பது மில்லியன் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 350000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இந்த புயலைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் 400 மிமீ (16 அங்குலம்) மழை பெய்யும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
வெள்ளத்தில் கார் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றொருவர் நிலச்சரிவில் புதைந்து இறந்ததாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டோக்கியோவில் கனமழை பெய்தது வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக புல்லட் ரயில் சேவைகள், படகுகள் மற்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
பிரதமர் ஃபுமியோ கிஷிடா புயலின் தாக்கத்தை கண்காணிக்க செவ்வாய்கிழமை வரை ஐ.நா. பொதுச் சபையில் உரை நிகழ்த்தவிருக்கும் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்வதைத் தாமதப்படுத்தினார்.
சுப்பர் சூறாவளி மணிக்கு 234 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. இது நான்கு அல்லது ஐந்து வகை சூறாவளிக்கு சமம்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு இ
மெக்சிகோ நாட்டின் மொரிலொஸ் மாகாணம் ஹர்வவசா நகரில் புத
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ
தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதி
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ மற்றும் வெளி
இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்
சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களு
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு
அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்
அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள க
