ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 90 பேர் காயமடைந்துள்ளனர்.
நன்மடோல் புயல்' என்ற மிகப்பெரிய புயல் தென்கோடியில் உள்ள கியூஷு தீவில் கரையைக் கடந்ததில் ஒன்பது மில்லியன் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 350000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இந்த புயலைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் 400 மிமீ (16 அங்குலம்) மழை பெய்யும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
வெள்ளத்தில் கார் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றொருவர் நிலச்சரிவில் புதைந்து இறந்ததாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டோக்கியோவில் கனமழை பெய்தது வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக புல்லட் ரயில் சேவைகள், படகுகள் மற்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
பிரதமர் ஃபுமியோ கிஷிடா புயலின் தாக்கத்தை கண்காணிக்க செவ்வாய்கிழமை வரை ஐ.நா. பொதுச் சபையில் உரை நிகழ்த்தவிருக்கும் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்வதைத் தாமதப்படுத்தினார்.
சுப்பர் சூறாவளி மணிக்கு 234 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. இது நான்கு அல்லது ஐந்து வகை சூறாவளிக்கு சமம்.
உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதா
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக,
உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்
சீனாவை சேர்ந்த சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹூ
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளா
உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் இருந்து மக்கள் ரஷ்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக்
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம
உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வ
வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத
சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்
