ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை சுமார் 400 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி அங்கிருந்து சென்று இன்று செவ்வாய்க்கிழமை காலை மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை நோக்கி கற்களை கொண்டு வீசி விரட்டியுள்ளனர்.
மேலும் விசைப்படகில் இருந்த மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர்.
நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து விரட்டியதால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பியுள்ளதுடன் படகு ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஜெகதாபட்டிணம் மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில் இன்று காலை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்தார்.
மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குற
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வ
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வசதி தொடர்பில் பாராளு
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய ம
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சுக்கள
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ
சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒரு
விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப
