More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மத ஸ்தலங்களுக்காக நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் இல்லை - காஞ்சன விஜேசேகர!
மத ஸ்தலங்களுக்காக நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் இல்லை - காஞ்சன விஜேசேகர!
Sep 20
மத ஸ்தலங்களுக்காக நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் இல்லை - காஞ்சன விஜேசேகர!

விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் கிடையாது. மத தலங்கள் தமது மாதாந்த மின்கட்டணத்தை முகாமைத்துவம் செய்துக்கொள்ள வேண்டும். மத தலங்களுக்கு மின்கட்டணத்தின் ஊடாக நிவாரணம் வழங்கும் தீர்மானத்தை எமது அமைச்சால் எடுக்க முடியாது. நிதியமைச்சு நிவாரணம் வழங்க தீர்மானித்தால் அதனை செயற்படுத்த தயார் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.



பிரதிசபாநாயகர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு கூடிய போது விகாரைகள் மற்றும் மத தலங்களுக்கு மின்கட்டணத்தில் நிவாரணம் வழங்கல் குறித்து எதிர்தரப்பினர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் குறிப்பிட்டதாவது,



பாராளுமன்றத்தின் ஒருமாதத்துக்கான மின்கட்டணம் 60 இலட்சமாக  காணப்படுகின்ற நிலையில் எதிர்வரும் காலங்களில் இத்தொகை மேலும் அதிகரிக்க கூடும். ஆகவே சூரிய சக்தியிலான மின்சக்தி திட்டத்தை பாராளுமன்றத்திலும் செயற்படுத்துவது அவசியமானதாகும். 



நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் அரச பாடசாலைகள் மற்றும் மாகாண கல்வி திணைக்களங்களின் கூரைகளில் சூரிய சக்தியிலான மின்னுற்பத்திக்கான திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.



மின்கட்டண அதிகரிப்பினால் சகல பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். 2013ஆம் ஆண்டு மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதை தொடர்ந்து மின்கட்டணம் குறைக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.



மின்னுற்பத்திக்கான கேள்வி மற்றும் செலவு அதிகரித்துள்ள நிலையிலும் கடந்த 8 ஆண்டு காலமாக மின்கட்டணத்தை அதிகரிக்காத காரணத்தினால் இலங்கை மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டது. மின்சார சபை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 80 பில்லியனையும் தேசிய மற்றும் ஏனைய மின் விநியோகஸ்தர்களுக்கு 45 பில்லியனையும் கடனாக செலுத்த வேண்டியுள்ளது.



நிதி நெருக்கடி தீவிரமடைந்ததன் பின்னணியில் மாற்று திட்டம் ஏதும் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபை மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு வலியுறுத்தியது. வீட்டு மின்பாவனை அரச மற்றும் அத்தியாவசிய கட்டடங்கள் தொழிற்சாலைகள் மற்றும் மத தலங்கள் என நான்கு பிரிவுகளாக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டன.



கடந்த காலங்களில் மின்கட்டண அதிகரிப்பின் போது ஏனைய பிரிவுகளிடமிருந்து  கட்டணம் அறவிடப்பட்டு அதனூடாக மத தலங்களுக்கு நிவாரண கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது அவ்வாறு செயற்படுத்த முடியாது. ஏனெனில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.



நாட்டில் 48682 மத தலங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடை மின்பாவனை மையங்கள் உள்ளன. புதிய மின்கட்டண திருத்தத்திற்கமைய 36000 ஆயிரம் மத தலங்களின் மின்கட்டணம் 3990 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.



மத தலங்களுக்கு என பிரத்தியேகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் நாட்டில் கிடையாது. ஆகவே மத தலங்கள் தமது மாத மின்கட்டணத்தை முகாமைத்துவம் செய்துக்கொள்ள வேண்டும்.



11 ஆயிரம் மத தலங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ள.



மின்னுற்பத்திக்கான கேள்வி அதிகரிப்பு மற்றும் மின்கட்டண அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தின் ஊடாகவே நிலையான தீர்வு காண முடியும். புதுப்பிக்கத்தக்க சக்தி வள திட்டங்களுக்கான தொழினுட்ப கருவிகளை இறக்குமதி செய்வது தற்போதை நிதி நெருக்கடிக்கு மத்தியில் சாத்தியமற்றது.



இந்தியா மற்றும் சீன கடனுதவி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களுக்கான கருவிகளையும் உபகரணங்களையும் இறக்குமதி செய்து அவற்றை குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.



மத தலங்களுக்கு மின்கட்டணத்தின் ஊடாக நிவாரணம் வழங்கும் தீர்மானத்தை எமது அமைச்சால் எடுக்க முடியாது.நிதியமைச்சு அத்தீர்மானத்தை எடுத்தால் அதனை செயற்படுத்த தயார் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

இலங்கையில் மயில்கள்  உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்

May27

வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டம

Sep26

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

May03

நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு

May15

மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக

Mar05

இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்

May10

நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ

May06

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம

Sep03

ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி ந

Sep08

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால

Mar30

தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்

Jan20

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங

Sep07

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ

Jan26

பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை

Mar08

உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (10:18 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (10:18 am )
Testing centres