பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கத்துடன் தேசிய பேரவை கொண்டுவரப்படவில்லை என்றும் அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக சர்வதேச சமூகத்தை நம்ப வைப்பதற்காகவே இந்த தேசிய பேரவை கொண்டுவரப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட பேரவையில் சேர்வதால் எந்தப் பலனும் இல்லை என்றும் அதனால் தாங்கள் அதில் தலையிட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேசிய பேரவையை ஸ்தாபித்தல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சிகளை தேசிய பேரவையில் இணையுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் கோப் மற்றும் கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க அரசாங்கம் மறுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு மத்தியிலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் மறுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் அரசாங்கத்தில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக பல அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை
கொழும்பில் நில மதிப்புகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி
வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச
யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு
நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சா
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிர
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம
