விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண விளையாட்டுப் பேரவை முற்பகல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் கூடிய பாடசாலை மட்டத்தில் அடையாளம் காணும் விளையாட்டு வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் வரை அவர்களை பாதுகாப்பதற்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் பாடசாலை நேரம் முடிவடைந்த பின்னர் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பு அமைப்புகளுக்கு அந்த விளையாட்டு வீரர்களை இடமாற்றம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்த திறமையான விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும்இ அவர்களின் நல்வாழ்வுக்காக மாகாண விளையாட்டு நிதியை நிறுவவும் இதன்போது முடிவு செய்தனர்.
இதேவேளை மாகாண விளையாட்டுத் திணைக்களத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் துசித பி. வணிகசிங்ஹ, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, மாகாண கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.டப்லியு. ஜி திஸாநாயக்க, மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் உட்பட மாகாண விளையாட்டு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை
வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப
இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர
யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒ
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கை
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு
இலங்கையில் உரப் பற்றாக்குறையால் விநியோகஸ்தர்கள் போர
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத
