பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 10000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளது.
கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அமைச்சர் அவர் கூறினார்.
இந்த விடயம் குறித்து சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் 'இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களை ஆதரிக்குமாறு தொழில்தருநர்களையும் வணிகங்களையும் மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர்களை பணியமர்த்துவதில் ஆர்வமுள்ள முதலாளிகள் அமைச்சின் புலம்பெயர்ந்த தொழிலாளர் முகாமைத்துவ நிலையத்திற்கு oscksm@mohr.gov.my அல்லது நாட்டின் பணியாளர்கள் திணைக்களத்திற்கு jtksm@mohr.gov.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெறலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட
அரசியல் கட்சிகளின் தேவைக்கேற்ப, அவர்களின் வழிகாட்டலு
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ
7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு
பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் ப
நாடாளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட தேச
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர
திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்
