உக்ரைனில் போரிட ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை வரவழைக்கும் ஜனாதிபதி விளாமிடிர் புடினின் முடிவுக்கு எதிராக பேரணி நடத்திய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தம் 1300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் மாஸ்கோவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய மனித உரிமைகள் குழுவான ஒவிடி- இன்போஃ தெரிவித்துள்ளது.
இர்குட்ஸ்க், பிற சைபீரிய நகரங்கள் மற்றும் யெகாடெரின்பர்க்கில் டசன் கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதனிடையே விளாடிமிர் புடினின் அறிவிப்புக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து வெளியேறும் விமானங்களுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்தன. மேலும் கூகிளில் 'ரஷ்யாவை விட்டு வெளியேறுவது எப்படி' என்ற தேடலம் உயர்ந்தது.
உக்ரைனில் சமீபத்திய போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்த ரஷ்யாவின் படைகளை வலுப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி ஜனாதிபதி விளாமிடிர் புடின்இ சுமார் 300000 இராணுவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன் புடின் ரஷ்ய பிரதேசத்தை பாதுகாக்க கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவேன் என்று வலியுறுத்தினார். இதில் அணுஆயுத தாக்குதல் எச்சரிக்கையும் அடங்கும்.
உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்புகளை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ்
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்க ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 18,221 வெளிநாட்டவர்கள் நாட தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதி உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறு
