இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்கலன்கள் அடங்கிய சோளத்தில் எஃபலடொக்சின் அளவு அதிகமாக காணப்பட்டதால் குறித்த 10 கொள்கலன்கள் அடங்கிய சோளத்தை திரிபோஷா நிறுவனம் நிராகரித்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட சோளத்தில் திரிபோஷா உற்பத்திக்கான சிறந்த தரம் அதில் அடங்கப்பட்டிருக்கவில்லை என திரிபோஷா நிறுவனத்தில் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பொதுவாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சோளத்தில் உள்ளே எஃபலடொக்சின் அதிகபட்ச அளவு ஒரு பில்லியனுக்கு முப்பது பாகங்கள் ஆகும்.
மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா தயாரிக்கப் பயன்படும் சோளத்தில் இருக்க வேண்டிய எஃபலடொக்சின் அளவு ஒரு பில்லியனுக்கு ஒரு பங்கு என குறிப்பிடப்பட்டுள்ளது.
திரிபோஷா உற்பத்திக்கு தேவையான தரமான சோளம் கிடைக்காத காரணத்தினால், குழந்தைகளுக்கான திரிபோஷா எட்டு மாதங்களாக உற்பத்தி செய்யப்படவில்லை என திரிபோஷ நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். இலங்கையில் 74 வருடங்களாக திரிபோஷ திரிபோஷ விநியோகம் செய்து வருவதாகவும் திரிபோஷாவுக்கான இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்கொள்வது இதுவே முதல் தடவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை
இலங்கைக்கு தேவையான எரிபொருளை ஏற்றிய 5 கப்பல்கள் எதிர்
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம
நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கி
கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசே
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் ம
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தம
பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பா
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நில
