உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான தொடர்களின் இறுதிப் போட்டிகள் லண்டனிலுள்ள தி ஓவல் மற்றும் லோட்ஸ் மைதானங்களில் நடைபெற இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அந்த இரு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களையும் இங்கிலாந்தில் நடத்துவதென கடந்த ஜூலையில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐ.சி.சி. ஆண்டு பொதுக் கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவற்றின் இறுதி போட்டிகளுக்கான இடங்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி கடந்த ஒகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்கியிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
தற்போது வரையிலான புள்ளிகள் பட்டியலில் அவுஸ்ரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.
இதேவேளை கிரிக்கெட் உலகின் போர் என வர்ணிக்கப்படும் ஆண்கள் ஆஷஸ் டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி எட்ஜ்பாஸ்டனில் ஆரம்பமாகும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஐந்து டெஸ்டுகளில் கடைசி போட்டி ஜூலை 27ஆம் திகதி ஓவல் மைதானத்தில் இடையில் லோர்ட்ஸ், ஹெடிங்லி மற்றும் ஓல்ட் ட்ராஃபோர்ட் ஆகியவை மூன்று போட்டிகளை நடத்துகின்றன.
இதற்கிடையில் பெண்கள் ஆஷஸ் ஜூன் 22ஆம் திகதி டிரென்ட் பிரிட்ஜில் ஒரு ஐந்து நாள் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது.
இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டன
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது
சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம
ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை
15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின
ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதி
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற
2015-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற
ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய ப
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டில
