உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான தொடர்களின் இறுதிப் போட்டிகள் லண்டனிலுள்ள தி ஓவல் மற்றும் லோட்ஸ் மைதானங்களில் நடைபெற இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அந்த இரு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களையும் இங்கிலாந்தில் நடத்துவதென கடந்த ஜூலையில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐ.சி.சி. ஆண்டு பொதுக் கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவற்றின் இறுதி போட்டிகளுக்கான இடங்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி கடந்த ஒகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்கியிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
தற்போது வரையிலான புள்ளிகள் பட்டியலில் அவுஸ்ரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.
இதேவேளை கிரிக்கெட் உலகின் போர் என வர்ணிக்கப்படும் ஆண்கள் ஆஷஸ் டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி எட்ஜ்பாஸ்டனில் ஆரம்பமாகும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஐந்து டெஸ்டுகளில் கடைசி போட்டி ஜூலை 27ஆம் திகதி ஓவல் மைதானத்தில் இடையில் லோர்ட்ஸ், ஹெடிங்லி மற்றும் ஓல்ட் ட்ராஃபோர்ட் ஆகியவை மூன்று போட்டிகளை நடத்துகின்றன.
இதற்கிடையில் பெண்கள் ஆஷஸ் ஜூன் 22ஆம் திகதி டிரென்ட் பிரிட்ஜில் ஒரு ஐந்து நாள் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிற
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்
ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற
சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டில
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இ
இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி சே
ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி
ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனா
