உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான தொடர்களின் இறுதிப் போட்டிகள் லண்டனிலுள்ள தி ஓவல் மற்றும் லோட்ஸ் மைதானங்களில் நடைபெற இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அந்த இரு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களையும் இங்கிலாந்தில் நடத்துவதென கடந்த ஜூலையில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐ.சி.சி. ஆண்டு பொதுக் கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவற்றின் இறுதி போட்டிகளுக்கான இடங்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி கடந்த ஒகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்கியிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
தற்போது வரையிலான புள்ளிகள் பட்டியலில் அவுஸ்ரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.
இதேவேளை கிரிக்கெட் உலகின் போர் என வர்ணிக்கப்படும் ஆண்கள் ஆஷஸ் டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி எட்ஜ்பாஸ்டனில் ஆரம்பமாகும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஐந்து டெஸ்டுகளில் கடைசி போட்டி ஜூலை 27ஆம் திகதி ஓவல் மைதானத்தில் இடையில் லோர்ட்ஸ், ஹெடிங்லி மற்றும் ஓல்ட் ட்ராஃபோர்ட் ஆகியவை மூன்று போட்டிகளை நடத்துகின்றன.
இதற்கிடையில் பெண்கள் ஆஷஸ் ஜூன் 22ஆம் திகதி டிரென்ட் பிரிட்ஜில் ஒரு ஐந்து நாள் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது.
இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை இடம்
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை
வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்
ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை க
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந
சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை
உலகக் கிண்ண வ-20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இந்
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்