நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அஃப்லாடாக்சின் இரசாயனம் இல்லை என ஸ்ரீலங்கா திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரிபோஷாவின் தரம் குறித்து எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம் என்றும் திரிபோஷா உட்கொள்வது பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
திரிபோஷாவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
தாய்மார்கள் மத்தியில் அச்சத்தை பரப்புவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதை இது என்றும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் உணவுப் பற்றாக்குறை சூழ்நிலையில் இதுபோன்ற போலியான அறிக்கைகள் தாய்மார்களின் மனநிலையை குலைத்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிபோஷா பொதியில் திருப்தியடைந்த தாய்மார்கள் உள்ளனர் என்றும் எனவே திரிபோஷா உண்ணுவதற்கு அச்சப்பட வேண்டாம் என தாய்மார்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திரிபோஷா தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவாக மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுத
ஜூன் 14ஆம் திகதி (பொசன் போயா) பொசன் தினத்தை முன்னிட்டு
மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நில
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை
முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூ
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா
