நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்கொண்ட மதிய உணவு விசமானமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய உணவு மாதிரிகள் ஏற்கனவே அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் நேற்று நாடாளுமன்ற உணவு விடுதியில் இருந்து மதிய உணவு உண்டனர்.
இதன்போது ஏற்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக நாடாளுமன்ற வைத்திய நிலையத்தில் ஆரம்ப சிகிச்சை பெற்று வந்தவர்கள் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரிகள் பெற்ற மதிய உணவில் கெட்டுப்போன மீன்கள் இருந்ததை அறிந்த சிற்றுண்டிச்சாலை பிரிவினர் அந்த மீன்களை அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
கெட்டுப்போன மீன்கள் எவ்வாறு உணவகத்திற்கு வழங்கப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதர
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம
கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி
சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில
இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத
பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும
பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய கு
இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப
மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து
